Tuesday, August 20, 2013

வாலி




காலத்தால் அழிக்க முடியாத 
பல கவிதைகளை பேனாமுனை கொண்டு 
செதுக்கிய கவி சிற்பியே உனை .....
காலன் அழைத்து சென்றாலும் 
தமிழ் எனும் மொழி உள்ளவரை 
அழியாது பட்டொளி வீசி
பிரகாசிக்கும் அய்யா உமது கவி ........!!!

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரதிப்போம்

அதே ஆற்றங்கரையில் !!


விழியிலே விதைத்து உயிரிலே
பூத்தது நம் காதல் நாம் இல்லாமல்
போனாலும் நம் காதல்
பேசப்படும் காவியமாக...
என் காது மடல்கள் தவம் இருக்க
துவங்கிவிட்டன உன் ஒலிகேட்க
என் கருவறையும் காத்திருக்க
துவங்கி விட்டது உன் உயிர் சுமக்க ....
உனக்கான கவிதைகளில் எழுத்தாய்
நான் என்னைத்தான் உதிர்த்து
கொண்டுருக்கிறேன் கண்டு கொண்டாயா
...
பனிப் பெய்த இரவுகளும்
அதிகாலைக் குளிர்ப் புல்லும்
சாட்சி சொல்லும் வாயிருந்தால் …
உன் பார்வையில் தீப்பற்றி
இதயத்தைக் கருக்கிய
ஆயிரத்தோர் இரவில் என்னையும்
உன்னையும் இழந்திருந்தேன் ...
உள்ளுக்குள் எங்கிலும் துக்கம்
பிதுக்கி இழுக்க நார்போல
இதயம் எங்கிலும் உன் நினைவுகள் …
அன்பே நீயும் நானும் காதல்
என்னும் படகில் ஏறி
வாழ்க்கையென்னும்
கடலில் பிரயாணிக்கிறோம்..
கரை சேருமோ இல்லை
கடலில் முழ்குமோ ஆனாலும்
நான் கனவுகள் காண்கிறேன் ...
உனக்கான கவிதைகளில்
என் உயிர் ஊற்றி எழுதுவதால்
உன்னை ஜீவனோடு வந்து சேர்கிறது
உள்மனதில் உனைத் தாங்கி
உனக்கென நானலைந்த நாழிகைள்
முள்ளாகத் தைக்கின்றது எனை
என் சோழனே..
மூவாயிரம் ஆண்டுகள்
காத்திருக்கிறேன்-அன்று
என்னை நீ விட்டு சென்ற
அதே ஆற்றங்கரையில் !!

காதலுடன் பூங்குழலி !!!!!

 

வளைகாப்பு



நமது கலாச்சாரத்தில் கருவிலே உதிப்பது முதல் உருவற்று அழிந்து நீர்த்துப்போகும் மறைவு வரை அத்தனையையும் தெய்வீகமாக நினைத்து கொண்டாடுவதே வழக்கம்.ஏனெனில் நாம் எதையும் முழுவதுமாக முற்றுப்பெறுவதாக நினைப்பதில்லை.எந்த ஒரு சடங்கும் தனி ஒரு மனிதனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டோ கட்டாயத்தின் பெயராலோ பின்பற்றபடுவது இல்லை,
பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உணர்வுப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது,. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம்.

கர்பினிப்பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து ஆறாவது முதல் எட்டாவது மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் கர்பகுளத்தில் கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது.
உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்கும்.

எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம்.அதனால் தான் இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய வளையல்களை அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர்,சில குடும்பங்களில் கர்பினிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி எடுப்பார்கள்! காரணம் இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள்.

அன்னையின் சிறு அசைவினை கூட உணர்ந்து கொள்ளும் அதித சக்தியை ஆண்டவன் நமக்கு கருவிலேயே அளித்துவிட்டான் ,அதனால் தான் குழந்தையாய் சுமக்கும் பெண் நல்லதையே காணவேண்டும் ,சிந்திக்கவேண்டும் ஒரு அன்னையின் எண்ணம் எப்படி இருக்கிறதோ அதை பொருத்துதான் குழந்தையின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது.
தான் உயிரை கொடுத்து இன்னும் ஒரு உயிருடன் உலகிற்க்கி திரும்பி வருகிறாள் ஒரு பெண் ,
இவர்களுக்கு தகுந்த சூழ்நிலையை உடனிருக்கும் நாம்தான் உருவாக்கி கொடுக்கவேண்டும் .

வண்ண வண்ண வளையல்களை கையில் அடுக்கி அன்னையும் தந்தையும் கருவில் இருக்கும் குழந்தையிடம் என் செல்ல கண்ணா நீ வாழப்போகும் உலகில் இதுமாதிரி பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து போராடவேண்டும் என்று அறிவிக்கும் நாளே சீமந்தம்,

மாத தேதியில் வரவிற்கு அதிகமாய் பட்ஜெட் போட்டுவிட்டு அதைக் கிழித்து போடும் காகிதம் போலே, தேவையில்லை என கலைத்து விட்டுப் போகும் வெறும் சதைப்பிண்டம் அல்ல,அது ஒரு உயிர் நம்மோடு வாழ நம்மவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை நாடி வந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன். இந்த உன்னதத்தை உணர்ந்து எல்லோரும் ஒன்றாகக் கூடிக் வரவேற்று மகிழ்வதே வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு . எனவே நமது முன்னோர்கள் காலங்காலமாக கடைபிடித்து வரும் அறிவியல் மற்றும் மனோவியல் ரீதியான அற்புதாமன சடங்கை மதித்துப் போற்றி பாதுகாப்போம்....
நம்மாலே ஒரு அபிமன்யூவை உருவாக்க முடியாது போனாலும் வருங்காலத்தை ஆள நல்லதோர் மனிதனை உருவாக்கவேண்டும் ....

பூங்குழலி ......!!!

வானையும் தொட்டுவிடும் தைரியம் உண்டு ...


வெண்பஞ்சு கையிலே வில்லெதர்க்கு
கூரிய வில்லிரண்டு கயலிலெ
தந்தான் ஈசன் எமக்கு ....

முகிலென்று எண்ணி முன்னே வந்தால்
பிடிச்சம்பலை போவீர் மங்கையர் முன்னே
காதலாலே கோலம்போட்ட
கால் விரல் கொண்டு கயவனின்
குரல்வளை நெறிக்கவும்
தயங்கமாட்டாள் பெண்ணின்று ....

வானையும் தொட்டுவிடும்
தைரியம் உண்டு ...
பூமியையும் பிளந்துபார்க்கும்
வல்லமையுண்டு ....
சாகச பேச்சாலே மதிமயங்க
பெண் பாவையென்று எண்ணினாயோ ?

தென்றலாய் உலாவும்
பெண்ணை சீண்டினால் புயலுக்குள்
அகப்பட்டு புதையுண்டு போவீர்
உமை போன்ற திண்ணைவாழ்
வீணர் உரையால்
விளைவதென்ன?எமக்கு இங்கு...

பரணிலே போட்டுவைத்த கவிதைகள் அல்ல
நாங்கள் உதிரத்தில் செதுக்கிய சிற்பங்கள் .....

காதலுடன் பூங்குழலி .

குழந்தை இன்மை




இன்று குழந்தை இன்மை எனும் குறைபாடு பரவலாக காணப்படுகிறது .இந்த மலட்டுத்தன்மையால் ஆண்,பெண் இருபாலரும் பாதிக்க படுகின்றனர் எனினும் பெண்களை விட ஆண்கள் அதிகமாக பாதிக்கபடுவது கணக்கெடுக்கப்பட்டு உள்ளது ,இது ஒரு நோயல்ல குறைபாடே இதற்கு முக்கிய காரணம் அதிகமான மன அழுத்தம் ,புகை பிடித்தல் ,குடிபழக்கம் போன்றவையே இதற்கு கரணம் ,மாறிவரும் கலாச்சாரம் அறிவியல் வளர்ச்சி ,சுவாசிக்கும்காற்று,உண்ணும் உணவு . மற்றும் ஒரு மறுக்கமுடியாத உண்மை பரஸ்பரம் அன்பு ,விட்டு கொடுக்கும் மனநிலை இன்றைய நமது தலைமுறையினரிடம் அதிகம் காணப்படுகிறது .

அறிவியல் வளர்ச்சி , கல்வி அறிவு ,பொருளாதாரம் வளர்ச்சி இல்லாத முன்னோர்கள் காலத்தில்கூட மலட்டு தன்மை எனும் குறைபாடு இவ்வாளவு அதிகம் இல்லை.

எவ்வளவு செல்வம் இருந்தாலும் மழலை செல்வம் இல்லை என்றால் நம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது .பணம் சம்பாதிப்பதில் இருக்கும் அக்கறையை தங்களது தலைமுறையை உருவாக்குவதில் ஏனோ காண்பிப்பது இல்லை.

இதனாலே பல இல்லங்களில் திருமண பந்தம் முறிவு ஏற்ப்பட்டுவிடுகிறது , விஞ்ஞான வளர்ச்சியில் விண்ணை தொடும் அளவிற்கு வளர்ந்துவிடோம் ஆனால் இன்றைய தலைமுறையினர் தனக்கு உள்ள குறைபாட்டை ஏற்று கொள்ள கூட முன்வருவது இல்லை,

சமுதாயத்தில் வெளிப்படையாக பாலியல் பற்றி பேசினாலே, பேசிய நபரை தவறாக மதிப்பிடும் போக்கு இருந்து வருகிறது. இதனாலேயே பொதுவான பாலியல் பிரச்சினைகளை, தங்களின் சொந்த பாலியல் குறைபாடுகளை கூட யாரும் வெளிப்படையாக பேசி, கேட்டு தெரிந்து கொண்டு தெளிவு பெரும் சூழல் இல்லாமல் இருக்கிறது. இன்று நாம் ஓரளவு பாலியல் விழிப்புணர்ச்சியின் ஆரம்பகட்டத்தில் இருக்கிறோம் என்றே கூறவேண்டும். வெளிப்படையாக பேச பாலியல்ரீதியான தெளிவு பெற மக்கள் முன்னேறி இருக்கிறார்கள்

மருந்துகளை உபயோகப்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் காணும் இடமெல்லாம் கலப்படம் எனும் அரிதரம் பூசி நிற்கிறது அதிகமான விளைச்சளை பெற வேண்டி அளவிற்கு அதிகமாக பூச்சி கொல்லிமருந்துகளை உபயோக படுத்துவதால் சத்தாக வேண்டிய காய்கனிகள் நச்சாக மாறிவிட்டது ,உயிரை காக்கும் காற்றைக்கூட பிளாஸ்டிக் போன்ற பொருள்களை எரிப்பதால் விஷமாக மாற்றிவிட்டோம் ,இயற்கையாக சமைத்து சாப்பிட்ட காலம் மாறிப்போய் அவசரமான இயந்திர உலகத்தில் நுழைந்ததால் இன்று பாஸ்ட் புட்களில் வேஸ்ட் புட்களை சாப்பிடுகிறோம், பல செயற்கையான ரசாயனம் கலந்த உணவுகளை, அவசர கதியில் சாப்பிடுகின்றோம். நாம் சாப்பிடும் உணவு, இருக்கும் இடம், தண்ணீர் எல்லாமே மாசு படிந்து விட்டது. இத்தகைய சூழலும் இன்று பாலியல் குறைபாடு மக்களிடையே அதிகமாக முக்கிய காரணமாககிவிட்டது .

அறிவியல் முன்னேற முன்னேற நமது நடைமுறை வாழ்கையில் இருந்து உடலாலும் மனதாலும் நம் விலகிவருகிறோம் என்பது துல்லியமாக கணிக்கப்பட்டு உள்ளது ...........

பூங்குழலி .....

வண்ண மடல்


வண்ணதுரிகையில்
வரைந்துவிட்ட வானவில்லாய் ...
துளித்துளியாய் தேன் சேர்க்கும்
மலர்போலே மெதுமெதுவாய்
சித்தத்தில் கலந்தெனை
பித்தாக அலையவிட்டாயே ...
நித்தம் ஒருநிலை தந்து -உன்
நினைவாலே புத்தம் புது
கவிபடைக்க எனை
மாற்றிவிட்ட வித்தகனே

பார்காமலே பூத்த காதலை
விரல் பிடிக்கமாலே பிடித்து
நடந்த நொடிகளை எண்ணி
வாஞ்சையோடு வரையும்
வண்ண மடல் இது
காதலோடு வாசித்திடு
என் மாயவா ....
காதலுடன்
பூங்குழலி

 

அன்னை தமிழ்

சிறு முகிலாய் கார் குழலாட
பிறைபோன்ற நெற்றியிலே
முழுமதி தாங்கி வந்தவளே
கயல் கூட்டம் விழியாக..

அன்னம் போன்ற நடையினிலே
அலையான சிற்றிடை
நளினமாய் நாட்டியம் ஆட
தாமரை வதனம் கண்டு
தரணியெல்லாம் திகைத்து நிற்க ..

சீர் கொண்டு காத்திருந்தோம்
சிங்காரி நின் வருகைக்காய்
தளுக்கி மினுக்கி தளிராக
தங்க சிலைபோலே ஆடியுடன்
ஆடிவந்த அன்னையே
நின் பாதம் தொட்ட இடமெல்லாம்
வண்ணம் மாறி மிளிருதம்மா...

அதை கண்டவுடன் சொற்பூக்கள்
என்னுள் மலர கவிதையாக
ஊற்றெடுதாய் தமிழன்னையோடு
கரம் கோர்த்து ..!!!

உன் மீது காதலுடன் பூங்குழலி